2022 14 AUG

தமிழர் களறி நடாத்தும் ஆதிலட்சுமி சிவகுமாரின் ”பொன் வண்டு” சிறுகதைத் தொகுப்பு - நுால் வெளியீட்டுவிழா அழைப்பு

Venue:  Tamils Kalary Bern

Country:  Switzerland

Venue: Tamils Kalary Bern

Country: Switzerland

From: 14 August, 2022 01:30:00 PM
To: 14 August, 2022 09:30:00 PM

அன்புடடையீர் வணக்கம்

தமிழ் இலக்கியம் பல் ஆயிரம் ஆண்டுகள் வளமும் தொடர்ச்சியும் கொண்டிருப்பினும், ஈழத்தில் தமிழ் இலக்கியம் கற்போருக்கு உள்ளத்தில் இன்பம் அளிக்கும் நூலாக மட்டுமல்லாது இனவிடுதலை உணர்வுகளையும் அளித்திருந்தது. அதுபோல் ஈழத்தின் போர்க்காலத்தில் அறிவை வளர்க்கும் தமிழ் இலக்கியப் படைப்புக்களும் தமிழர் நிலத்திலிருந்து வெளிவந்தது சிறப்பாகும்.

புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் சிறுகதை, நாவல், நாடகம் என எழுத்துக்கலை வடிவங்களை தம் வளத்திற்கேற்ப வெளியிட்டு புலம்பெயர் தமிழ்ப்படைப்பாளிகள் உலகினையும் படைத்துள்ளார்கள். தாயகப் படைப்பாளியாகவும் தற்போது புலம்பெயர்ந்து சுவிற்சர்லாந்தில் வாழ்ந்து வரும் புலம்பெயர் படைப்பாளியாகவும் இரு உலகினையும் நன்கறிந்த சிறந்த தமிழ்ப்படைப்பாளியாக திருமதி. ஆதிலட்சுமி சிவகுமார் விளங்குகின்றார்.

வெறும் கற்பனை வளம் மட்டுமன்றி, கலையழகும், நற்றிமிழ் சொல்லாட்சியும் சேர்த்து, மனித உறவுகளின் உணர்வினை வெளிப்படுத்தும் இயல்பும் கொண்டு நற்படைப்பாக இவரது படைப்பு அமைந்துள்ளது.

தமிழர் களறி மண்டபத்தில் இந்நூல் வெளியிடப்படுவது எமக்கு நிறைவினை அளிக்கின்றது.

ஈழமணித்திருநாட்டின் செம்மையான படைப்பாளியின் நூல் வெளியீட்டில் பங்கெடுத்து சிறக்க அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

அன்புடன்

தமிழர் களறி